தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மாகாண வளர்ச்சி துறையின் புதுப்பித்தல் துறை முன்னாள் அதிகாரிகளான John Hanlon மற்றும் Georgina Vasilevski மீது சட்டத்திற்கு புறம்பாக பயணம் மேற்கொண்டதாக புகார்கள் எழுந்தன.
புதுப்பித்தல் துறையில் வகித்து வந்த பதவியைத் தவறாகப் பயன்படுத்தி மெல்போர்ன் மற்றும் பெர்லினுக்கு அதிக அளவில் பயணம் மேற்கொண்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியாவின் ஊழலுக்கு எதிரான தன்னாட்சி அமைப்பின் ஆணையர் விசாரணை நடத்தி வந்தார்.
18 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த விவகாரத்தில் புதிதாக வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது இருவருக்கும் எதிரான போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாதால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இந்த ஒட்டுமொத்த விசாரணை காலத்திலும் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிகாரிகள் இருவரும் தங்கள் மீது எந்தவிதமான களங்கமும் இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தனர்.
John Hanlon -ன் வழக்கறிஞர் குழு தெற்கு ஆஸ்திரேலியா அரசு தரப்பு வழக்கறிஞருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது அதில் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கை புதிதாக தொடங்கி விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அடிலெய்ட் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் போது இதற்கு முந்தைய அலுவலக விதிமுறைகள் அவர்களின் பயணத்திற்கு அனுமதி அளித்ததாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்வதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணையில் விளைவாக தற்போது பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசு பொருளாக மாறி இருப்பதாகவும், மக்கள் பணத்தில் இதுபோன்ற தவறான செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாகவும் விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
Link Source: https://ab.co/3ndEEBG