இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் இளவரசர் Andrew கடந்த 2001 ம் ஆண்டு 17 வயது பெண் Virginia Giuffre-ஐ பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்த வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இளவரசர் Andrew தன் மீதான குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்து வந்தார்.
இதில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். நியூயார்க் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் அதிரடியாக இளவரசர் Andrew வழக்கு விசாரணையை சந்தித்தாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே ராணி 2ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் இந்த நேரத்தில் நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில்,இந்த வழக்கின் விசாரணை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கை சுமுகமாக தீர்த்து வைக்குமாறு அரச குடும்பத்தின் சார்பில் இளவரசர் Andrew- க்கு அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இளவரசர் Andrew தரப்பில் நியூயார்க் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சமரசம் செய்து கொள்வதாகவும், இளம்பெண் Virginia Giuffre-
க்கு உரிய இழப்பீடு அளித்து அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு திரும்ப பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. Virginia Giuffre தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் இளவரசர் Andrew வழங்கும் இழப்பீடு அந்த தொண்டு நிறுவனத்திற்கான நன்கொடையாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்றுவந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அளிக்கும் இழப்பீடு தொடர்பான உரிய விவரங்களை இளவரசர் Andrew தரப்பு தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
Link Source: https://bit.ly/3H0Aovx