கடந்த புதன்கிழமை அன்று சிட்னி ஃபெடரெல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முதல்வர் மெக்கவுனிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தொழிலதிபரும் அரசியல் தலைவருமான பால்மர் பல்வேறு ஊடக நேர்காணல்களில் தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்று முதல்வர் மெக்கவுன் வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் பால்மர் குறித்த முதல்வர் மெக்கவுனின் செல்போன் குறுஞ்செய்திகள் ஊடகங்கள்ல் வெளியாகியுள்ளன. அதில், பால்மர் அரசுக்கு எதிரானவர் என்றும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் முதல்வர் மெக்கவுன் குறிப்பிட்டுள்ளார். செவன் வெஸ்ட் மீடியாவின் தலைவர் மொகுல் கெர்ரி ஸ்டோக்ஸுடன் இதுகுறித்து அவர் பேசியுள்ளார். தற்போது ஆஸ்திரேலியா முழுக்க இவ்வழக்கு தொடர்பான விபரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முதல்வர் மார்க் மெக்கவுன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை இழக்க நேரிடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் எதிர்கட்சிகளும் இந்த விவகாரத்தை கண்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Link Source: https://ab.co/3CFRU7x