Breaking News

பிரிஸ்பேனில் அதிகரிக்கும் திடீர் தொற்று ..மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா மற்றும் என்.டி கொண்டுவந்துள்ள புது விதிகள் !

Brisbane new corona case effect..New rules introduced by WA, Tasmania and NT

WA மற்றும் NT இடங்களுக்கு சென்ற அனைவரும் தன்னை தனிமை படுத்திக்கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்னர். பயண விதிகளின் படி Brisbane மற்றும் Moreton Bay ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவிற்குள் பயணம் செய்ய வேண்டியவர்கள் பயண அனுமதி பெற சேவை விக்டோரியாவை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Brisbane new corona case effectகுயின்ஸ்லாந்தில் ஏற்பட்டுள்ள புதிய பாதிப்பு சமூக வழக்குடன் தொடர்புடையது என்று மரபணு சோதனை மூலம் நிரூபணமாகியுள்ளதால். குயின்ஸ்லாந்தின் குறிப்பிட்ட சில பகுதிகளை அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அறிவித்துள்ளது. மேலும் அந்த தொற்று UK-தொற்றுடன் தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது. எவ்வாறு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை முதல் WA -விற்கு பயணம் செய்த குயின்ஸ்லாந்து பயணிகள் யாராக இருந்தாலும் இரண்டு வாரங்களுக்கு தனிமை படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. WA சுகாதாரத் துறை அறிவித்த தகவலின் படி , 41,665 COVID-19 தடுப்பூசிகளை வழங்கியுள்ளது, இதில் 3444 பேர் இரண்டு doses-களையும் பெற்றுள்ளனர். நேற்று 2403 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்திய உற்பத்தியாளர்கள் வழங்கும் 90 மில்லியன் டோஸ்சஸ் தடுப்பூசிகள் தாமதமாகி இருப்பதாகவும் கூறப்படுகின்றது .