செண்ட்ரல் குயின்ஸ்லாந்து பகுதியில் குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கு சொந்தமான பேருந்தில் கடந்த புதன்கிழமை இரவு 3 வயதான குழந்தை நேவா தனியாக சிகிக்கொண்டாள். பிறகு பெற்றோரின் புகாரை அடுத்து அவள் பத்திரமாக மீட்கப்பட்டாள்.
கியூன்ஸ்லாந்து மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை பொது நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டாள். தொடர்ந்து உடல்நலம் தேறியதை அடுத்து குழந்தை நேவா ராக்ஹாம்டன் பகுதியில் இருக்கும் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
இதையடுத்து சமூகவலைதளங்களில் பலரும் குழந்தை நேவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து குயின்ஸ்லாந்து பகுதியில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செயல்படுவதற்கு கடும் நடவடிக்கைகளை அரசு அமல்படுத்தியுள்ளது.