ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பல்வேறு புதிய முயற்சிகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே தடுப்பூசி செலுத்தக்கூடிய பணிகளில் கூடுதலாக மருத்துவர்களும் மருத்துவமனைகளும் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தற்போது மக்கள் பாதுகாப்பாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக டிரை இன் தடுப்பூசி மையங்களுக்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன் அடிப்படையில் விக்டோரியா மாகாணத்தில் டிரைவிங் மையங்கள் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் முன்பதிவு செய்து விட்டு இந்த மையத்திற்கு வரலாம் என்றும் காரில் அமர்ந்தவாறே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது 40-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த மையத்தில் பைசர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 வயதை கடந்தவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்களில் அமர்ந்தவாறே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போது மிகப்பாதுகாப்பாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது. இந்த திட்டம் ஐரோப்பிய நாடுகளில் மிக வரவேற்பை பெற்ற திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/2VBBFHi