ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவு பிரிவு அமைப்பான ASIO பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச உளவாளிகள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது.
சர்வதேச உளவாளிகள் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களில் தொழில்நுட்ப ரீதியாக தலையிட்டு வருவதாகவும் இது கடுமையான கண்டனத்திற்கு உரியது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் அதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது போன்ற நடவடிக்கைகளில் உளவு அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகளை நாள்தோறும் அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பின் தலைவர் Mike Burgess தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் வர்த்தக உறவுகள் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பின் பலம் ஆகியவற்றைக் குறித்து தெரிந்து கொள்வதற்காக உளவாளிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், பல்வேறு நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த ஒரே குறி வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுப்பதும் தொடர்ந்து வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புக்கு கூடுதல் சட்ட உரிமைகள் வழங்குவதற்கான கோரிக்கை இந்த அறிக்கையின் வாயிலாக முன் வைக்கப்பட்டிருப்பதாகவும், உளவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் அவர்களது தொழில்நுட்ப ரீதியிலான அத்துமீறலை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Mike Burgess தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/2Zi9rU5