கடந்த ஏப்ரல் 17-ம் தேதி ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியை நோக்கி வந்த பி-8ஏ போசைடன் போர் கப்பல், விடுதலை ராணுவ கடற்படை கப்பலில் இருந்து லேசர் ஒலி வந்தததாக ஆஸ்திரேலியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஸ்காட் மோரீசன், ஆஸ்திரேலிய ராணுவ அதிகாரி மீது சீன ராணுவம் லேசர் ஒலியை பாய்ச்சியுள்ளது. இதுதொடர்பாக தெரியவந்ததை அடுத்து தூதரகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் துறைகள் வழியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த விவகாரம் குறித்து பேசிய ஆஸ்திரேலியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், ராணுவ தர லேசர் ஒலியை தேவையில்லாமல் படுத்துவதன் மூலம் மனிதனுக்கு பார்வை திறன் குறைபாடு ஏற்படக்கூடும் மற்றும் ராணுவ தளவாடங்களிலும் சேதம் விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இதுபோன்ற ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரமான செயலை செய்தது குறித்து எதுவும் செய்ய முடியாது என்று சீனா அரசாங்கம் நம்புகிறது. இதுபோன்ற அத்துமீறிய செயல்களை ஆஸ்திரேலியா எப்போதும் ஏற்றுக்கொள்ளாது என்று அமைச்சர் பீட்டர் டட்டன் கூறினார்.
Link Source: https://bit.ly/3IdWR9W