இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் ஜெனரல் அலுவலக செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.
அதில் கவர்னர் ஜென்ரல் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகியவைகளை எடுத்துக் கொண்ட நிலையிலும் அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததன் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சிட்னியில் உள்ள Admiralty இல்லத்தில் கவர்னர் ஜெனரல் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து அவர் தனது பணிகளை கவனிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
லேசான அறிகுறிகள் இருக்கும் நிலையில் அதற்கான உரிய சிகிச்சைகளை அவருக்கு அங்கேயே அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று தெற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Steven Marshall தான் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். ப்ரீமியர் மகளுக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் அவர் மூலமாக இவருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் தேவைப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இடையே தனக்கு சாதாரண அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் இது தன்னை பெருமளவில் பாதிக்கவில்லை என்றும் கவர்னர் ஜெனரல் David Hurley தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 2 டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட உயர்மட்ட அரசியல் ஆளுமைகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவது அங்கு பேசுபொருளாக மாறியுள்ளது.
Link Source: https://ab.co/33bXjFT