பெர்த் நகரில் நடக்கும் ஆஸ்திரேலிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக Swan River -ல் நடக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என கடந்தவாரம் பெர்த் நகர மேயர் Basil Zempilas அறிவித்திருந்தார்.
தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் மேயர் கூறியிருந்தார்.
இந்நிலையில் திங்கட்கிழமை பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த மேயர் Basil Zempilas தடுப்பூசி செலுத்தாதவர்கள், மற்றும் ஒரு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் ஆஸ்திரேலிய தின வாணவேடிக்கை கொண்டாட்டத்தில் பங்கேற்க தடை இல்லை என்று கூறியுள்ளார். மாகாண சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என முன்னதாக அறிவுறுத்தப்பட்டது. தற்போது மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத் துறையின் ஆலோசனையின்படி விதிக்கப்பட்ட நிபந்தனை தளர்த்தபட்டிருப்பதாகவும் மேயர் Basil Zempilas தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் மாகாண அரசு எதையும் வற்புறுத்தவில்லை என மேற்கு ஆஸ்திரேலிய ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.
வானவேடிக்கை நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு வெளியானபோது கடந்த ஆண்டு 2021- ல் தொற்று பரவல் காரணமாக தடுப்பூசி சான்றிதழ் காண்பிக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலை இருந்ததாகவும், மக்கள் கூட்டம் பெருமளவில் இருந்ததால் அவர்கள் தடுப்பூசி அளித்து அதற்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை காண்பிக்க அறிவுறுத்த பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேவைப்படும் பட்சத்தில் சான்றுகளை காண்பிக்க கூறியதாகவும் பார்வையாளர்கள் கண்ணியமான முறையிலேயே நடத்தப்பட்டதாகவும் பெர்த் மேயர்
Basil Zempilas கூறியுள்ளார்.
மாகாண சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி காவல்துறை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதில் மாநகரின் தலையீடு எதுவும் இல்லை என்றும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் காவல் துறை அமைச்சர் Paul Papalia மேயரின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மாநகராட்சி நிர்வாகத்தின் சொந்த முடிவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண அரசு இது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிட்டதாக தமக்கு தெரியவில்லை என்றும் காவல் துறை அமைச்சர் Paul Papalia கூறியுள்ளார். ஆஸ்திரேலிய தின வானவேடிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்பது கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்றும் தெற்கு பெர்த் நகரப்பகுதிகளில் அதற்கான எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெர்த் மாநகர மேயர் Basil Zempilas இது தொடர்பாக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதற்கான சான்றுகள் எதுவும் பார்வையாளர்களிடம் கேட்கப்படாது என்றும் அது தொடர்பான நிபந்தனைகள் அனைத்தும் நடத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3H56maQ