கொரோனா பாதிப்பு காரணமாக வருமான ரீதியாக பெரும் அளவு வீழ்ச்சியை அனைவரும் சந்தித்து வருகின்றனர். அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் பண தட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் பணம் (சில்லறை மற்றும் நோட்டுகள்) அதிக அளவில் தட்டுப்பாடுகள் இருக்கும் என்ற செய்தியை கேட்ட அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர். 2020 ஆம் ஆண்டில் 8.3 சதவீதமாக இருந்த அளவு குறைந்து , 2024 ஆம் ஆண்டில் 2.1 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று ஃபிண்டெக் நிறுவனம் எஃப்ஐஎஸ் (FIS) தனது ஆறாவது ஆண்டு உலகளாவிய payment அறிக்கை கணித்துள்ளது.மேலும் இது உலகளவில், 2020 ஆம் ஆண்டில் 20.5 சதவீத பரிவர்த்தனைகளில்(transactions) பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடன், டென்மார்க் மற்றும் ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா உலகின் நான்காவது மிக மோசமான பொருளாதாரமாக இருக்கும் என்று எஃப்ஐஎஸ் தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் Philip Lowe, ஆஸ்திரேலியா ஒரு பணம் இல்லாத நாடாக மாறும் என்பதை சந்தேகத்துடன் ஒப்புக் கொண்டார். எலக்ட்ரானிக் அமைப்புகள் தவறானவை இல்லை என்றும், அவசர காலகட்டத்தில் பணம் மட்டுமே அனைவர்க்கும் கை கொடுக்கும் என்றும் அவர் கூறினார். 2020 ஆம் ஆண்டில் 9.5 சதவீதத்திலிருந்து 2024 ஆம் ஆண்டில் பங்கு சந்தை இரு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், (Emi) தவணை முறை அதிகரித்து உள்ளதாக எஃப்ஐஎஸ் அறிக்கை கணித்துள்ளது.