பவுலர் தொகுதியின் தற்போதைய எம்.பியாக கிரிஷ் ஹேயர் உள்ளார். அவர் ஓய்வு பெறவுள்ளதால், இத்தொகுதியில் வரும் தேர்தலில் லேபர் கட்சியின் சார்பாக மீண்டும் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பவுலர் தொகுதியில் விரைவில் நடைபெறவுள்ள கீழவை உறுப்பினருக்கான தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக கிருஸ்டினா கென்னெல்லி தெரிவித்துள்ளார்.
ஆனால், பவுலர் தொகுதியின் வேட்பாளாராக டூ லியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், வியட்னாமை பூர்வீகமாக கொண்ட டூ லியை தான் ஆதரிப்பதாகவும் கிரிஷ் ஹேயர் தெரிவித்துள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வராக இருந்த கிருஸ்டினா கென்னெல்லி வேட்பாளர் தேர்தலில் தன்னுடன் மோத இருப்பதை கண்டு தான் அஞ்சவில்லை என்றும், பவுலர் தொகுதியில் நீண்ட நாட்களாக வசிப்பவள் என்ற முறையிலும், தன் சமூதாய மக்களின் தேவையை கருத்தில் கொண்டும் இந்த தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டூ லியை வேட்பாளராக அறிவிப்பது, கட்சியில் பன்முகத்தன்மையை அதிகரிக்கும் என்றும், கிரிஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வாயிலாக கருத்து தெரிவித்துள்ள கென்னெல்லி, சமூக நீதியை காக்கவும், தன்னுடையை கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு ஏற்பவே தான் பவுலர் தொகுதியில் போட்டியிட தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 1975ல் வியாந்நாமில் இருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்தவர்களில் டூ லியும் ஒருவர், சுமார் 15 % வியட்நாம் பூர்வீகவாசிகள் பவுலர் தொகுதியில் வசிக்கின்றனர்.
வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்துள்ள லேபர் கட்சியின் தலைவரான ஆண்டனி அல்பேனிஸ், ஒரு பலமிக்க வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
Link Source: https://bit.ly/3C6vjQj