Breaking News

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல், டீசல் பொருட்களின் விலை 300 முதல் 400 மடங்கு வரை அதிகரித்துள்ளதால், பல்வேறு தொழில் மற்றும் உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

As the price of petrol and diesel in Australia has increased 300 to 400 times, various industries and manufacturing plants have been affected.

சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் மதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு தொழில் உற்பத்தியாளர்கள் எரிபொருட்களை நம்பி இயங்கி வருவதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

As the price of petrol and diesel in Australia has increased 300 to 400 times, various industries and manufacturing plants have been affectedஆற்றல் உற்பத்தி துறையில் நீண்ட நாள் பணி காலங்கள் மிகவும் சொற்பமான விலையில் கிடைக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் 750-க்கும் அதிகமான நிறுவனங்கள் தொழிலை இழுத்து மூடிவிடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

 

 

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் விலை சர்வதேச விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்வதில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. நிலக்கரி உற்பத்திக்கும் எரிபொருட்கள் தேவைப்படுவதால், அந்த துறையும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.