சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் மதிப்பு மற்றும் உக்ரைன் போர் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் பல்வேறு தொழில் உற்பத்தியாளர்கள் எரிபொருட்களை நம்பி இயங்கி வருவதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆற்றல் உற்பத்தி துறையில் நீண்ட நாள் பணி காலங்கள் மிகவும் சொற்பமான விலையில் கிடைக்கும். ஆனால் தற்போதைய சூழ்நிலை அதற்கு உகந்ததாக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் 750-க்கும் அதிகமான நிறுவனங்கள் தொழிலை இழுத்து மூடிவிடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நிலக்கரி மற்றும் எரிபொருட்கள் விலை சர்வதேச விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்வதில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. நிலக்கரி உற்பத்திக்கும் எரிபொருட்கள் தேவைப்படுவதால், அந்த துறையும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.