கடந்த திங்களன்று மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,429-ஆக உள்ளது. அதன்படி பி.சி.ஆர் சோதனை முடிவு மூலம் 12,059 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதேபோல 10,370 பேருக்கு ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மூலம் வைரஸ் பாதிப்பு உறுதியானது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை, வரும் காலங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் முதியவர்கள் பூஸ்டர்ட் டோஸ் எடுத்துக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link Source: https://ab.co/3fClFLO