Breaking News

குயின்ஸ்லாந்து மாநில பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க ஒப்புதல்

ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்தில் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் மொழி பாடத்தை சேர்க்க மாநில பாடத்திட்ட குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Approval to teach Tamil language in Queensland State Schools

ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல வருடங்களாக வசித்து வருகின்றனர்.

பல வருடங்களாக இவர்கள் வசித்து வம்தாலும், தமிழ் மொழி மீதான பற்றும் பிணைப்பும் இன்னும் குறையவில்லை.

இந்த நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கும், அடுத்த தலைமுறையினருக்கும் தமிழ் மொழியை கொண்டு சேர்க்கும் விதத்தில் பல்வேறு முயற்சிகளை ஆஸ்திரேலிய வாழ் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக குயின்ஸ்லாந்தில் இயங்கும் மாநில பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்கவும் அதனை ஒரு மொழிப் பாடமாக சேர்க்கவும் குயின்ஸ்லாந்து பாடத்திட்ட மதிப்பீட்டு ஆணையம் ( QCAA) ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன் படி வரும் 2023 ஆண்டு முதல் குயின்ஸ்லாந்து மாநில பள்ளிகளில் பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக சேர்க்கப்படும்.

இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரிஸ்பேன் தமிழ் பள்ளி மற்றும் தாய் தமிழ் பள்ளி போன்ற அமைப்புகளுக்கும் தமிழ் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.