நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள கனடா பே பகுதியின் நகர தந்தையாக இருப்பவர் ஏஞ்சல்லோ டிஸிரெக்ஸ். இவர் சில கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட பல்வேறு வகையில் கையூட்டு பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பான புகாரை ஆஸ்திரேலியாவின் ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணைக்குழு விசாரணை நடத்த முடிவு செய்தது. அதன்படி சிட்னியில் இதற்கான விசாரணை இன்று நடைபெற்றுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான ஏஞ்சல்லோ டிஸிரெக்ஸ் தனது வழக்கறிஞர் கெர்ரி ஸ்வாயருடன் நேரில் ஆஜரானார். இதுதொடர்பான விசாரணை மேலும் நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் கனடா பே-வில் நடந்த இடைத் தேர்தலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக நகர தந்தைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஏஞ்சல்லோ டிஸிரெக்ஸ். குறிப்பிட்ட கட்டுமானங்களுக்கு சலுகைகளை வழங்கும் பொருட்டு அவர் கையூட்டு பெற்றதாகவும், வெளிநாடுகளுக்கு சென்று சொகுசு வாழ்க்கை வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.