மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் இருப்பவர் பேராசிரியர் டோனி பிளாக்லி. இவரிடம் ஏ.பி.சி ஊடகம் சமீபத்தில் நேர்காணல் செய்துள்ளது. அதில் கொரோனாவின் புதிய வகை திரிபு நிலை குறித்து பல்வேறு தகவல்களை அவர் கூறியுள்ளார்.
அதன்படி மூன்று முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலு, இந்த புதிய திரிபால் பாதிக்கப்படக் கூடும். எனினும், இனிமேல் உருவாக்கக் கூடிய வேரியண்டுகளிடம் இருந்து நம்மை தடுப்பூசி பாதுகாக்கும். புதிய தலைமுறைக்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நான்காம் முறை தடுப்பூசி போடுவதை விட, இப்புதிய தலைமுறை தடுப்பூசிகள் நம்மை பாதுகாக்கும். ஆனால் சொல்ல முடியாது, கொரோனாவின் புதிய கொடிய வேரியண்ட் வருங்காலத்தில் வரவும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாகவே அனைத்தும் பயணளிக்கும் தடுப்பூசியை நாம் உருவாக்கிவிடுவது நல்லது என்று பேராசிரியர் டோனி பிளாக்லி கூறினார்.
Link Source: https://ab.co/3iMzUzn