Breaking News

2022-ம் ஆண்டை கண்கவர் வானவேடிக்கையுடன் சிட்னி நகரம் வரவேற்றாலும், புதிய ஆண்டின் வருகையை ஆஸ்திரேலியர்கள் பலரும் எளிமையான விருந்துகள் மற்றும் அடக்கமான கொண்டாட்டங்களுடன் முடித்துக் கொண்டனர்.

சிட்னியில் நள்ளிரவுக்கான கவுண்டவுன் தொடங்குவதற்கு முன்னர், இரவு 9 மணியளவில் துறைமுகத்தில் ’வெல்கம் டு கன்ட்ரி’ என்கிற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பலரும் சமூக இடைவெளியுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதேபோல மெல்போர்ன் நகரமும் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றது. விக்டோரிய மாகாணத்தில் நடத்தப்பட்ட வானவேடிக்கைகளும் கண்கவர் நிகழ்வாக அமைந்தது. அதேபோல ஆஸ்திரேலியர்கள் பலரும் இந்தாண்டுக்காக புத்தாண்டு விருந்தை மிகவும் எளிமையாக நடத்தினர். அதேபோல பொதுவெளியை தவிர, மற்ற இடங்களில் புத்தாண்டு மிகவும் அடக்கமாகவே கொண்டாடப்பட்டது.

Link Source: https://ab.co/3zfCRjs