ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகையின் போது கிடைக்கும் மிட்டாய்களை அளவுக்கு மீறி சேகரித்து வைத்துக் கொள்வது நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்தவுடன் அவை காணாமல் போய்விடும்.
குறிப்பிட்ட சில சாக்லேட்டுகள் ஜூன் 1-க்கு பிறகு சாப்பிட முடியாததாகி விடும். இதுகுறித்து மிட்டாய்களை தயாரிக்கும் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசும் போது, ஈஸ்டரை முன்னிட்டு மிட்டாய்களின் உற்பத்தி பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும்.
அதை பொதுமக்களை வாங்க வைப்பதற்காக ஜுன் 3-ம் தேதி மிட்டாய் கெட்டுப்போகும் தேதியாக அதனுடைய கவரில் குறிப்பிடப்படும். இது பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறை தான். இதை வியாபார தந்திரம் என்று கூறலாம் என தெரிவித்தார். சில நிறுவனங்கள் அடுத்தாண்டு ஈஸ்டர் வரை கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய வகையிலான மிட்டாய்களை தயாரிக்கின்றன. ஆனால் எதை சாப்பிட்டாலும் அளவுடன் சாப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும் என்று அவர் குஊறினார்.
நிறுவனங்கள் மிட்டாய்களை தயாரிக்கும் போது, சந்தை மதிப்பை அறிந்து செயல்படும். ஆனால் இதுபோன்ற விதிகள் வீட்டில் தயாரிக்கப்படும் மிட்டாய்களுக்கு பொருந்தாது. வீட்டில் இருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த பொருட்களை வைத்து மிட்டாய் தயாரிப்பார்கள். இதையே நிறுவனங்களும் பின்பற்றுவது கிடையாது.
நிறுவனங்கள் மிட்டாய்களை சந்தைக்காக தயாரிக்கின்றன. ஆனால் வீடுகளில் மிட்டாய்களை அன்பை வெளிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்படுகின்றன.