Breaking News

ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சம் புகுந்த ஆப்கன் விளையாட்டு வீராங்கனை : பெண்கள் அடையாளத்தை இழக்கும் சோகம் ஆப்கனில் தொடர்வதாக வேதனை

Afghan athlete seeks refuge in Australia. Tragedy continues as women lose identity in Afghanistan

ஆகஸ்ட் 17 – 2021 செவ்வாய்க்கிழமை – தாலிபான் செவ்வாய்க்கிழமை என்றே நினைவில் நிற்கும் அளவுக்கு ஆப்கனில் நிலைமை மோசமாகி வருகிறது. ஆப்கன் தலைநகர் காபூல், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களை முழுவதுதாக தங்களது கட்டுப்பாட்டில் தாலிபான்கள் வைத்துள்ள நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் தற்போது நிலவும் தீவிரத்தன்மையை உணர்ந்து அச்சம் கொண்டுள்ளனர்.

Afghan athlete seeks refuge in Australia. Tragedy continues as women lose identity in Afghanistan,.ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு முன்னாள் வீரர்கள் தற்போது உதவி புரிந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான தனித்த அடையாளத்தை அழிக்கும் வகையில் தாலிபான்கள் ஏற்கனவே செயல்பட்டதும், தற்போதும் அதே முனைப்போடு பல்வேறு பணியிடங்களில் பெண்களை வேலைக்கு வராமல் செய்யும் அளவுக்கு தலிபான்களின் கட்டுப்பாடு அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் கால்பந்தாட்ட குழுவின் முதல் பெண் கேப்டனாக இருந்த Khalida Popal, தனது அணியில் உள்ள மற்ற வீரர் வீராங்கனைகள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களை மீட்பது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ஏற்கனவே தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கன் இருந்தபோது நிலைமையை முற்றும் உணர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

Afghan athlete seeks refuge in Australia. Tragedy continues as women lose identity in Afghanistan,,.தான் அளவுகடந்த வலியை அனுபவித்து இருப்பதாகவும், பெண்களின் கூக்குரல்கள் தன்னை பெருமளவு பாதிப்பு தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் ஏராளமான பெண்கள் தலிபான்களின் பிடியில் திட்டமிட்டு கொண்டிருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமான திறமையாளர்கள் தற்போது பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டு இருப்பதாகவும் அவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் அவர்கள் தங்கள் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்கான உரிய வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டியது தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

Afghan athlete seeks refuge in Australia. Tragedy continues as women lose identity in Afghanistan.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டு இருப்பவர்களை ஆஸ்திரேலிய பாதுகாப்பு படை வீரர்கள் பத்திரமாக சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தாலிபான்கள் விமான நிலையத்தையும் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதால் அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டுச் செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் தாலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3mAA5AW