அடிலெய்டில் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த இளம்பெண் மற்றும் வாலிபர் தங்களது அறைகளில் இருந்து வெளியேறி ஒரே அறையில் சந்தித்துக் கொண்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.
விக்டோரியாவின் Kilmore பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் Ashley Thomas Clements ஏற்கனவே அவரது அறையிலிருந்து விதிகளை மீறி வெளியே வந்ததாக எச்சரிக்கை செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தார். தமிழில் அடிலெய்டில் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் Isabell Grant தனது அறையிலிருந்து வெளியேறி Thomas Clements அறைக்குச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவசரகால மருத்துவ விதிகளை மீறியதாக இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். ஆன்லைன் வழியாக நீதிபதிகளிடம் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர் Thomas Clements தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனது தாய் மற்றும் அங்கு தனிமைப்படுத்துதல் விடுதியில் இருக்கும் இளைஞர் Thomas Clements FIFO பகுதியில் பிளம்பர் ஆக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் உதவிக்காக தவித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு அவர் உதவி மட்டுமே செய்ததாக Thomas Clements தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இது முட்டாள்தனமான செயல் என்றும், சுகாதாரத் துறையின் சட்டத்தின் அடிப்படையில் 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்துதல் முகாமின் அறையை விட்டு வெளியில் வராமல் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இந் நிலையில் Thomas Clements மீண்டும் அடுத்த வாரம் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள 18 வயது இளம் பெண்ணான Isabell Grant மீது வேறு சில திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் எனவே அவரும் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் ஆக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3w1tQsM