தென் ஆஸ்திரேலியப் பகுதியில் ஒரு மாத இடைவெளிக்குள் 2 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7.04 மணியளவில் அடிலேய்டின் பார்க்கர் மலைப்பகுதிக்கு அருகே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9-ஆக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக மூத்த நில அதிர்வு நிபுணர் ஜானதன் பாத்கேட் பேசும்போது, அடிலேய்டு மாகாணத்தில் தென்கிழக்குப் பகுதி முழுவதும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் அதிகளவில் இயக்கங்கள் கொண்ட பகுதியாக இது உள்ளது. இன்னும் சில நாட்களில் அல்லது வாரங்களில் அவ்வப்போது நில அதிர்வு ஏற்படக்கூடும் என்று தெரிவித்தார். ஜியோ சயின்ஸ் ஆஸ்திரேலியாவின் இணையதளம், அடிலேய்டு பெருநகரத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்நில அதிர்வு உணரப்பட்டது. அடிலேய்டின் வடக்குப் பகுதியான கவ்லர் வரையும் மற்றும் தெற்குப் பகுதியான மெனிங்கி வரையும் நில அதிர்வு ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3JY4EcB