நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதியதாக 17,447 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1642 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 69 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று மட்டும் அம்மாநிலத்தில் 16 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
கியூன்ஸ்லாந்து மாகாணத்தில் 44,085 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 9281 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 578 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் கியூன்ஸ்லாந்து மாகாணத்தில் 15 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
நார்தன் டெரிட்டரி மாநிலத்தில் மொத்தம் 39 பேர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மொத்தமாக 655 பேருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஒருவருக்கு உயிர் காக்கும் கருவி உதவியுடன் சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
மேற்கு ஆஸ்திரேலியாவில் புதியதாக 9,134 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 248 பேருக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் அம்மாநிலத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.