விக்டோரியாவின் தனியார் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 51 வயதான ரிச்சர்ட். எப்போதும் சுறு சுறுப்பாக இருக்கும் இவர், தன்னுடைய உடல் நலனை பேனை, உடற்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது என்று தன்னுடைய உடல் நலனை பாதுகாத்து வந்தார். கொரோனா தொற்று பரவத்தொடங்கிய போது, இந்த தொற்று தன்னை ஒன்றும் செய்யாது என்று நம்பியதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகாளான முகக்கவசத்தை எப்போதும் அணிந்திருந்தாக
தெரிவிக்கும் ரிச்சர்ட், சிட்னியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்றபோது
தனக்கு தொற்று ஏற்பட்டதாக தெரிவிக்கிறார்.
டெல்டா வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஏழாம் நாளில் தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சையை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் சேர்ந்ததாகவும்
தெரிவித்துள்ளார்.
கடந்த 15 நாட்களாக அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போது , பல நேரங்களில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், படுக்கையில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தன்னால் செயற்கை சுவாசம் இல்லாமல் இருக்க முடியவில்லை என்றும் அச்சத்துடன் விவரிக்கிறார்.
மேலும் சில தருணங்களில் தான் உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும், மருத்துவர்களின் முயற்சியாலும், அவர்களின் நம்பிக்கையான வார்த்தைகளாலும் அந்த அபாய கட்டத்தில் இருந்து மீண்டதாகவும் ரிச்சர்ட் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். தற்போது அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், தான் 15 கிலோ எடையை இழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிச்சர்ட் கடந்த மே மாதம் முதல் தவனை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நிலையில்,
இரண்டாம் தவணை தடுப்பூசிக்காக செலுத்துவதற்கு முன்பாக அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் யாரும் கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும்,
தகுதியுள்ளவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ரிச்சர்ட் வலியுறுத்தியுள்ளார்.
Link Source: https://ab.co/2X417pv