இந்தோனேஷியாவின் டபானாம் என்கிற பகுதியில் உள்ளது பாபாகான் கோயில். இது காயு புத்திக் என்று உள்ளூர் மக்களாக் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள மரத்தை பலநூறு ஆண்டுகளாக அங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரஷ்யாவைச் சேர்ந்த சமூகவலைதள பிரபலமான அலினா ஃபாஸ்லீவா, மக்கள் வழிபாடு நடத்தும் மரத்துக்கு அடியில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதை இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டதை அடுத்து, அது இந்தோனேஷியா முழுக்க வைரலானது. சமூகவலைதளங்களில் தனக்கு கண்டனங்கள் பதிவு செய்யப்படுவதை உனர்ந்த அலினா, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். தற்போது அவர் இன்னும் இந்தோனேஷியாவில் இருப்பதை அடுத்து, அலினா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் வழிபடும் மரத்துக்கு கலங்கம் ஏற்படுத்திய குற்றத்திற்காக அலினாவுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் 55 ஆயிரம் இங்கிலாந்து பவுண்டு அபராதமாக விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வழக்கை இந்தோனேஷிய காவல்துறை குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.