Breaking News

மூன்று குழந்தைகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட தாய் -அதிர்ச்சியில் கணவன் !

தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது 3 குழந்தைகளை ஒரு தாய் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . இதயத்தை உலுக்கும் இக்கோர சம்பவத்தின் விவரங்கள் விசாரணையில் வெளிவந்துள்ளது.Kati perinovic (42) மற்றும் அவரது குழந்தைகள் Claire(7),Anna(5) மற்றும் Matthew(3) அவர்கள் ஜனவரி பாதியில் ஒரு வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர் . இவர்களது தந்தை Tomislav Tullamarine வீட்டிற்குள் அவர்களை கண்டுபிடித்ததாக தெரிகிறது.

Tomislav மளிகைக்கடையில் இருந்து வீடு திரும்பும் போது தனது மகனை குத்திய காயங்களுடன் சமையலறையில் கண்டதாக கூறினார் . மேலும் அவரது மனைவியையும், இரண்டு மகள்களையும் வேறொரு அறையில் பெரிய சமையலறை கத்தியோடு கண்டபோது பேரதிர்ச்சி அடைந்தார். அவர் ட்ரிபிள் O-வை அழைத்து மருத்துவர்களுக்காக காத்திருந்தார்.

நாட்டை உலுக்கிய சோகம் குறித்து ஒரு Coroner தொடர்ந்து விசாரணை நடத்தினர் . மேலும் அவர் Perinovic-ன் மனநல பதிவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அறிக்கைகளை அவர் ஆராய்ந்தார்.Katie இறப்பதற்கு முன்பு பெரிய மன அழுத்தத்துடன் போராடியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. விக்டோரியாவின் நீண்ட நாள் கொரோனா ஊரடங்கு அந்தப் பெண்ணை மிகவும் பாதித்ததாக தகவல் வெளிவந்துள்ளது .மனநிலைசரியில்லாமல் இவ்வாறு கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.

Tomislav இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருப்பதால் புதன்கிழமை விசாரணையில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மெல்போன் வடமேற்கில் குழந்தைகளுக்காக வீட்டிற்கு வெளியே அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் Claire,Anna, Katie மற்றும் Matthew ஆகியோருக்கு ஒரு குழந்தையின் குறிப்பு இருந்தது, அதில் நீங்கள் எப்போதுமே மிகவும் நல்லவர், அன்பானவர் மற்றும் அக்கறையுள்ளவர் எனவும், Claire எப்போதும் என்னுடைய சிறந்த நண்பர் எனவும் இருந்தது.இந்த சம்பவம் குறித்த ஏதாவது கூடுதல் ஆதாரங்கள் கிடைக்குமா என விசாரணை நடந்து வருகின்றது.