நியூசவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 2 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜான் ஹண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் மிக குறைந்த வயதில் தொற்றுக்கு ஆளான குழந்தையாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரஸ் தொற்று தான், குழந்தையின் மரணத்துக்கு காரணமா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியவில்லை.
இந்நிலையில் குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து கண்டறிய கொரோனர் விசாரணைக்கு ஹண்டர் நியூ இங்கிலாந்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண சுகாதாரத்துறை அதிகாரி, மருத்துவர் கெர்ரி சாண்ட், குழந்தைக்கு எந்த விதமான உடல் நல பாதிப்பும் இல்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.
மிக கடினமான ஒரு சூழ் நிலையை அக்குடும்பம் எதிர்கொண்டுள்ள நிலையில் , இந்த இறப்புக்கு காரணம் குறித்து கண்டறிய அத்துறை சார்ந்த நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் முடிவு வெளிவரும் என்றும் கெர்ரி தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3FNAaY1