வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநிலத்திலுள்ள கோல்லி பகுதி காவல்நிலைய ஆய்வாளர் மார்டின் வோயஸ் வெளியிட்டுள்ள தகவலில் மெடிக் தெருவில் மதியம் 1 மணியள்வில் சிறுவன் ஒருவன் மிதிவண்டியில் வந்த போது விழுந்துவிட்டான்.
மிதிவண்டியில் எந்தவிதமான கோளாறும் இல்லை. தலையில் தலைக்கவசமும் அணிந்திருந்தான். நடைபாதையில் மதிவண்டியை ஓட்டிக் கொண்டு வந்த போது, நடைபாதையின் விளிம்பின் தட்டி கீழே விழிந்துவிட்டான். இதுதொடர்பாக தகவல் வந்ததும் காவல்துறையினர் இங்கு விரைந்து வந்தனர். எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, அருகி பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று ஆய்வாளர் மார்டி வோயஸ் கூறினார்.