Breaking News

கான்பெராவின் பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 30 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

A 30-year-old man has been charged in connection with a fire that broke out in the old parliament building in Canberra.

கடந்த வாரம் கான்பெராவின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே போராட்டக்காரர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அவர்கள், நாடாளுமன்றப் பகுதியில் தீ வைத்தனர்.

A 30-year-old man has been charged in connection with a fire that broke out in the old parliament building in Canberra..ஆஸ்திரேலியன் கேபிட்டல் டெரிட்டரி போலீஸ் இதுதொடர்பாக கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒருவரை கைது செய்தனர். அதேபோல இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசர் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தது மற்றும் முன்முகப் பணியாளரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நபரை போலீசார் அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தது தொடர்பான விசாரணையில் மேலும் கைது நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://bit.ly/31qw9dY