மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கோரல் பே கடற்கரை உள்ளூர் மக்கள் தங்களின் விடுமுறையை கொண்டாடும் இடமாக உள்ளது.
சிட்னியில் இருந்து தங்களின் விடுமுறை கொண்டாடுவதற்கு ஜாக்சன் பார்ட்லட்டும் அவரது தந்தையும் கோரல் பே கடற்கரைக்கு வந்துள்ளனர்.
கரையில் இருந்து சுமார் 75 மீ தொலைவில் ஜாக்சனும் அவருடைய தந்தையும் கடலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னை நோக்கி நிழல் ஒன்று நெருங்கி வருவதை பார்த்ததாக 10 வயது சிறுவனான ஜாக்சன் மிரட்சியுடன் பகிர்கிறார். முதலில் அதனை dugong என்று எண்ணியதாகவும் பிறகு அந்த உருவம் தன்னை நோக்கி வேகமாக வருவதாக உணர்ந்துக்கொண்டதாகவும் சிறுவனான ஜாக்சன் தெரிவிக்கிறார்.
தன்னுடைய அருகில் வந்த சுறா முதலில் தன்னை கடிக்க முயன்றதாகவும், பிறகு தன்னுடைய ஒரு காலை கடிக்க முயன்ற போது தான் அணிந்திருந்த காலணியையும், சுறா கடித்ததாகவும் ஜாக்சன் கூறுகிறார்.
பிறகு மற்றொரு காலை கடித்ததாகவும் ,தன்னுடைய அலறல் சத்தம் கேட்டு தன்னுடய தந்தையும்,மற்றவர்களும் உடனடியாக தன்னை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது பெர்த்தில் உள்ள ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இந்த விபத்து கடல் மீதான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய போது, இல்லை கடல் எனக்கு பிடித்தமான இடம், அங்கு செல்வதை நான் எப்போதும் விரும்புவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3vvuI77