இந்தியாவில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ஒரே நாளில் கோவிட் தொற்றால் 457 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் பதிவான உச்சகட்ட எண்ணிக்கையாகும்.
இந்நாட்டில் கோவிட் தொற்றால் இது வரை 162951 பேர் மரணமடைந்துள்ளனர். கோவிட் தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் உலகளவில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. கோவிட் முதல் அலையின் போது உச்சகட்டமாக கடந்த செம்படம்பர் மாதத்தில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 98000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்பொது இரண்டாம் அலை தொடங்கியுள்ளதால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் மட்டும் ஒரு நாள் பாதிப்பாக சுமார் 39000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 227 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்புஊசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.