விக்டோரியாவின் தென் – மேற்கிலுள்ள வார்னாம்பூல் என்கிற பகுதிக்கு அருகில் இருக்கும் இடம் கிரிக்ஸ்டால். இங்குள்ள கிரிக்ஸ்டால் -கொரோயிட் சாலையில் காலை 10.20 மணியளவில், படுகாயம் அடைந்த நிலையில் 2 ஆண் சடலங்கள் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவருடைய உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து சம்பவம் நடந்த அதே பகுதிக்கு அருகாமையிலுள்ள சாம்பர்லைன் வீதியில் இறந்த நிலையில் மற்றொரு ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கூறப்பட்டது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து மூன்று நபருடைய சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது விபத்தா என்கிற ரீதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று பேரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாக இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணையை துவங்கியுள்ளனர்.