Breaking News

விரைவில் எல்லாவித பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை !

NSW தனது எல்லையை வெள்ளிக்கிழமை இரவு திடீரென மூடியதன் காரணமாக, ஆயிரக்கணக்கான விக்டோரியா மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் எல்லையை கடக்க 2300க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 175 பேருக்கு மட்டும், ஞாயிற்றுக்கிழமை எல்லையை கடக்க அனுமதி கிடைத்தது.

இந்த பிரச்சினை குறித்து Premier Daniel Andrews மற்றும் Prime Minister Scott Morrison ஆகியோர் தொலைபேசியில் விவாதித்தனர். இது குறித்து Prime Minister Scott Morrison கூறுகையில், மத்திய அரசாங்கம் விக்டோரியா மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளது என்றார்.

Victorian federal MP Darren Chester எல்லை மூடப்பட்டதை கடுமையாக விமர்சித்த பிறகு, விக்டோரியா மக்களின் உடல்நிலையை கருத்தில் கொள்ள விக்டோரியா Health Authorities-களிடம் வலியுறுத்தினார்.Prime Minister Scott Morrison இந்த சூழ்நிலைக்கு மனம் வருந்தினார். இருந்தபோதிலும், மாநில அரசின் உரிமையையும் மதித்து, விரைவில் எல்லாவித பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, NSW மற்றும் விக்டோரியர்களுக்கு வெற்றியை தரும் என்றார்.

NSW-விலிருந்து நாடு திரும்ப கோரியவர்களில், ஊனமுற்ற குழந்தையை பெற்றுள்ள குடும்பத்தை காப்பாற்றும் முயற்சியில் Former federal Labor leader Bill ஈடுபட்டார். இது குறித்து விக்டோரியா Health Department விரைவாக முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விக்டோரியாவில் புதிதாக மூன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . 32,544 பரிசோதனைகளிலிருந்து இந்த தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை 24 வழக்குகள் Buffalo Smile Thai restaurant மற்றும் NSW Cluster மூலம் பரவியுள்ளது. இதுவரை மொத்தம் மாநிலத்தில் 38 வழக்குகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது .