Breaking News

மூன்று நாள் ஊரடங்கு முடிவுக்கு வந்தது .. அடுத்த 10 நாட்களுக்கு முகக்கவசம் கட்டாயம் !

Brisbane-னில் உள்ள ஹோட்டல் ஊழியருக்கு UK Covid – 19 தொற்று உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டாலும், Brisbane-னில் ஊரடங்கு நீட்டிக்கப்படாது. இந்த நபர் ஜனவரி 7ஆம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் யார்யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் என்று தேடி வருகிறோம். Covid – 19 மாறுபாடு மிகவும் மோசமானது என்று எங்களுக்கு தெரியும் என Chief Health Office Dr. Jeannette Young கூறினார்.

Brisbane ஊரடங்கு செய்யவேண்டிய முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. Genome Sequencing நடத்தப்படுகிறது. Brisbane ஊராக்கில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். Moreton Bay மற்றும் Redland உள்ள மக்கள் மாலை 6 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வர அனுமதியில்லை. மூன்று நாள் பிறகு வெள்ளிக்கிழமை வரை Covid – 19 தொற்று பரவவில்லை. Premier Annastacia Palaszczuk Greater மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மக்கள் அடுத்த 10 நாட்களுக்கு கட்டாயமாக எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக கடை, மருத்துவமனை , நூலகம், சினிமா தியேட்டர், Gym-களில் அணிய வேண்டும். வீடு, Restaurant, Bar மற்றும் எங்கு சமூக இடைவேளை உள்ளதோ அங்கே அணிய தேவையில்லை. ஊரடங்கில் 370 பேர் ஹோட்டல் ஊழியருடன் தொடர்பில் இருந்தவரை கண்டுபிடிக்க முடிந்தது. அதில் 172 பேருக்கு Negative மற்றும் மீதியுள்ளவர்களில் பரிசோதனை முடிவிற்காக காத்துக் கொண்டுள்ளோம்.

மிக குறைவான தொற்றுக்களே உள்ளது. Woolworths at Calamvale, North Coles Sunnybank Hills, Sunny Bank Hills ஆகிய மூன்று இடங்களிலும் இருந்த எத்தனை மக்களை கண்டுபிடித்தோம் என்று தெரியவில்லை. ஆகவே மக்கள் தாமாக முன்வருமாறு Dr. Jeannette Young கூறினார்.

Industry Queenslands Amanda Rohan கூறுகையில், வணிகத்தின் புதிய விதிமுறைகள் பின்னடைவே ஆகவே அவர் மக்களை வணிகத்தை ஆதரிக்குமாறு கூறினார். இதைப்போல் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வோம்.

எதிர்கட்சி தலைவர் David Crisafulli கூறுகையில், இது தொழில்களுக்கு பின்னடைவு இருந்தாலும் எந்த ஒரு புதிய தொற்றும் இல்லாதது பெருமூச்சு விட வைத்துள்ளது . போலீஸ் ஒத்துழைப்பு ஒட்டு மொத்த சூழ்நிலையையும், வலுப்படுத்தவும் எதிர்கால தவறுகளை குறைக்கவும் முடிந்தது என்று கூறினார்.

Dr. Jeannette Young, குறிப்பாக Calanval North மற்றும் Algester உள்ள மக்களை டெஸ்ட் செய்ய வலியுறுத்தினார். மேலும் புதிய 4 வைரஸ்களின் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் விரைவாக தொற்றுகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Greater Brisbane லிருந்து மக்கள் இப்போது ACT க்கு பயணம் செய்ய முடியும். Brisbane-னிலிருந்து ACT க்கு வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். Brisbane-னிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்நாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை 500 லிருந்து 850 ஆக உயர்த்த உள்ளதாக NT Chief Minister Mr. Gunner கூறியுள்ளார்.