Breaking News

இலவசமாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் NSW அறிவிப்பு !

4 புதிய கொரோனா தொற்று பதிவால் பலதரப்பட்ட மக்களும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்துகொள்ளலாம் என NSW அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் திங்கட்கிழமை இரவு 8 மணி வரையில் மட்டும் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில் நான்கு பேர் உள்ளூர் பகுதியிலும் , நான்கு பேர் ஹோட்டலிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, மற்ற பகுதிகளில் இருந்து முகாம்களுக்கு வந்தவர்களாலும் தொற்று இருக்கும் என செவ்வாய்க்கிழமை அன்று பரிசோதனை முகாம்களை பார்வையிட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணி வரையில் 26,391 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதை விட கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,275 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Nyngan-இல் இருக்கும் Orange and Broken Hill-க்கு சென்று வந்த 18 வயதான ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது புதன்கிழமை அன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ள மக்களும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

திங்களன்று இரவு 8 மணி வரை கொரோனா பதிவு செய்யப்பட்ட நான்கு பேர் மற்றும் சிட்னியின் மேற்கில் உள்ள ballooning Berala cluster முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு பேர் என மொத்தம் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.