Breaking News

ஆஸ்திரேலியாவில் Covid-19 தொற்றுகள் எதுவும் பதிவு செய்யாததால், மேற்கு ஆஸ்திரேலியா, NSW மற்றும் QLD-க்கு தனது எல்லைகளை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

Qld and NSW

NSW மற்றும் குயின்ஸ்லாந்திலிருந்து, பயணிகள் மற்றும் மக்கள் விரைவாக வெளியேற முடிகிறது ஆனால் அவர்கள் இன்னும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தபடுவார்கள்.

மேற்கு ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை திங்கள்கிழமை முதல் NSW மற்றும் குயின்ஸ்லாந்திற்கு மீண்டும் திறக்கிறது. ஆனால் மக்கள் இன்னும் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு Covid-19 சோதனையை பெற வேண்டும். மாநிலங்களை இனி குறைந்த ஆபத்தான பகுதி என கூற முடிவு செய்து மேலும் பயணிகள் இனி WA-க்கு வருவதற்கு விலக்கு தேவையில்லை. இந்த வார தொடக்கத்தில் விக்டோரியா குறைந்த ஆபத்து உள்ள மாநிலமாக கூறப்பட்டிருந்தது. ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் WA-க்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

WA-ன் தலைமை சுகாதார அதிகாரி கூறுகையில், குயின்ஸ்லாந்து பிப்ரவரி 1 முதல் குறைந்த ஆபத்து உள்ள மாநிலமாக மாறும் எனக் கூறினார். மேலும் தனிமைப்படுத்தபடுதலும் நீக்கப்படுவதாக கூறினார். நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் QLD அரசாங்கமும் மற்றும் பிற மாநிலங்களும் விரைவாக நடவடிக்கை எடுத்தது.மேலும் Mark Gowan கூறுகையில், சமூகத்தில் உள்ள அனைவரும் WA-ஐ பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஒரு முக்கிய பங்கினை கொண்டுள்ளனர். மழையிலும் அவர்களின் ஒத்துழைப்புக்கு நான் நன்றியை சொல்ல விரும்புகிறேன்.

Perth  விமான நிலையத்திற்கு வரும் அனைத்து மக்களும் சுகாதார பரிசோதனை மற்றும் வெப்பநிலை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் 11-வது நாளில் கொரோனா சோதனையை பெற வரவேண்டும். சுகாதார அமைச்சர் Roger Cook கூறுகையில், மேற்கு ஆஸ்திரேலியா மக்கள் நல்ல சுகாதார நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், அவர்கள் வெளியே செல்லும் போது SafeWA  செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

Covid-19 சோதனைக்கான கழிவுநீர் சோதனை திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவில் கூடுதல் கண்காணிப்பை பெற்று வருகிறது, என Roger Cook கூறினார். ஆனால் Covid-19-ன் அறிகுறிகளுடன் மக்களை சோதிப்பதற்காகன முக்கியமான தேவையை இது மாற்றாது எனவும் கூறினார். மேலும் WA வெள்ளிக்கிழமை இரண்டு புதிய தொற்றுகளை அறிவித்தது, இருவரும் வெளிநாட்டுப் பயணிகள் மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். நடைமுறையில் உள்ள 12 வழக்குகள் கவனமாக கண்காணிக்கப்படுகின்றன.WA மொத்தம் 11 தொற்றுக்களை அடையாளம் செய்துள்ளது, இது மிகவும் தொற்று நோயான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்புடையது.